இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றவர் கைது!

திருச்சி, திருவெறும்பூர் அருகே இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற அரசு சிறுவர் சீர்த்திருத்தப்பள்ளியை சேர்ந்த வார்டனை திருவெறும்பூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருவெறும்பூர் அருகே உள்ள கீழக்குறிச்சி, முத்துராஜாதெருவை சேர்ந்தவர் பிரபு, இவர் கார் டிரைவராக வேலைப்பார்த்து வருகிறார். இவரது மனைவி சரண்யா(28) இவர் தனியாக வீட்டில் நேற்று இருந்துள்ளார்.

அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் திருவேங்கடம் (32), இவர் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் வார்டனாக வேலைப்பார்த்து வருகிறார். இந்நிலையில், திருவேங்கடம்(32) நேற்று தனியாக வீட்டில் இருந்த சரண்யாவிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார்.

இச்சம்பவம் குறித்து சரண்யா திருவெறும்பூர் காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதன் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து திருவேங்கடத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். திருவேங்கடத்திற்கு கல்யாணம் ஆகி 3குழந்தைகள் உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

-ஆர்.சிராசுதீன்.

Leave a Reply