திருச்சி, திருவெறும்பூர் ஒன்றிய அதிமுக சார்பில் தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு.

தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி மயிலாடுதுறையில் நடக்கும் காவிரி நதிநீர் விளக்க பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, திருச்சி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் இன்று சென்றபோது, திருவெறும்பூர் ஒன்றிய அதிமுக சார்பில் ஒன்றிய செயலாளர் ராவணன் தலைமையில், பெல் கைலாசபுரத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதில் திருச்சி புறநகர் மாவட்ட செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி.ரெத்தினவேல், திருச்சி மாநகர மாவட்ட செயலாளரும், திருச்சி மக்களவை உறுப்பினருமான ப.குமார், அமைச்சர்கள் வளர்மதி, வெல்லமண்டி நடராஜன், ஓ.எஸ்.மணியன், விஜய பாஸ்கர் மற்றும் துவாக்குடி நகர செயலாளர் பாண்டியன், கூத்தைப்பார் பேரூர் கழக செயலாளர் முத்துகுமார், பெல் ஏடிபி தொழிற்சங்க பொதுச்செயலாளர் கார்த்திக் உட்பட, ஏராளமான கட்சி தொண்டர்கள் தமிழக முதல்வருக்கு சிறப்பான வரவேற்பை அளித்தனர்.

மேலும், திருநெடுங்களத்தில் உள்ள திருநெடுங்களநாதர் கோவிலில் இருந்து சோமசுந்தர சிவாச்சாரியர், ரமேஷ் சிவாச்சாரியார் தலைமையில் பூரண கும்ப மரியாதையும் அளித்தனர்.

-ஆர்.சிராசுதீன்.

Leave a Reply