அணைகள் பாதுகாப்பு மசோதா! -மாநில அரசின் உரிமைகளில் தலையிடும் வகையில் உள்ளது : பிரதமர் நரேந்திர மோதிக்கு, தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி கடிதம்.

அணைகள் பாதுகாப்பு மசோதா, மாநில அரசின் உரிமைகளில் தலையிடும் வகையில் உள்ளது என, இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு, தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

ஜூன் 13-ல் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த மசோதா மாநில அரசுகளுக்கு அனுப்பி வைக்கப்படவில்லை. மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்ட மசோதா, மாநில அரசின் உரிமைகளில் தலையிடும் வகையில் உள்ளது. எனவே, அணைகள் பாதுகாப்பு மசோதாவை நிறுத்தி வைக்க வேண்டும் என, அக்கடிதத்தில் தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

Leave a Reply