ஏற்காட்டில், அந்தோணியார் திருவிழா தேர் பவனி விமர்சையாக நடைப்பெற்றது.

சேலம் மாவட்டம்,  ஏற்காட்டில், அந்தோணியார் கோவில் திருவிழா கடந்த ஒரு வார காலமாக நடைப்பெற்று வந்த நிலையில், கோவில் தேர் பவனி நேற்று முன்தினம் சிறப்பாக நடைபெற்றது. அந்தோணியார், மாதா, காவல் சம்மேன்ஸ் என மூவருக்கும் தனித் தனியே  பூக்கள் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேர்களில் லாங்கில் பேட்டை கிராமத்தில் உள்ள அந்தோணியார் கோவில் வளாகத்தில் துவங்கிய தேர்பவனி  ஏற்காடு டவுன், கடை வீதி, பஸ் நிலையம், ஜெரீனாக்காடு, ஒன்டிக்கடை உள்ளிட்ட பகுதிகள் வழியாக பவனி வந்து  மீண்டும் கோவில் வளாகத்தில் நிறைவடைந்தது. இந்த தேர்பவனியை பெருந்திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

– நவீன் குமார்.

Leave a Reply