சாலை பாதுகாப்பு வார விழா விழிப்புணர்வு பேரணி திருச்சியில் நடைபெற்றது!

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மற்றும் திருச்சி மாநகர காவல்துறையினர் சார்பில் 29-வது சாலை பாதுகாப்பு வார விழா விழிப்புணர்வு பேரணி, இன்று காலை 11 மணியளவில் திருச்சியில் நடைபெற்றது. இதில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் மற்றும் திருச்சி மாநகர போக்குவரத்து காவலர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.

சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கியும், பதாகைகளை கையில் ஏந்தியும் சாலையில் ஊர்வலமாகச் சென்றனர்.

– ரா.ரிச்சி ரோஸ்வா.

 

Leave a Reply