திருச்சி பாய்லர் அருகே அரசு பேருந்து ஓட்டுனரை தாக்கிய தனியார் பேருந்து ஓட்டுனர் கைது!

திருச்சி, துவாக்குடி டெப்போவை சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுனர் திருவளர்சோலையை சேர்ந்த துரை என்பவருடைய மகன் மங்கள்ராஜ் (வயது41), துவாக்குடியிலிருந்து ஜங்சனுக்கு அரசு பேருந்து TN-45 N-2358 பேருந்தை ஓட்டிச் சென்ற போது, TN-45 BC 6697 தனியார் பேருந்து ஓட்டுனர் பாலக்கரையை சேர்ந்த முத்துச்சாமி என்பவரது மகன் செல்லப்பா (வயது 21), நேரம் பிரச்சனை காரணமாக பாய்லர் ட்ரெய்னிங் சென்டர் பேருந்து நிறுத்தத்தில் தகராறு செய்து தகாத வார்த்தைகளால் ஆபாசமாக திட்டி அரசு பேருந்து ஓட்டுனர் மங்கள் ராஜை அடித்துள்ளார்.

இதுசம்மந்தமாக அரசு பேருந்து ஓட்டுனர் மங்கள் ராஜ் பாய்லர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில்,  பாய்லர் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகசுந்தரம், தனியார் பேருந்து ஓட்டுனர் செல்லப்பா மீது வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்து நீதி மன்ற காவலுக்கு அனுப்பினார்.     

-மு.துளசி மணி.

Leave a Reply