மன்னார்குடி அருகே பேருந்து நிறுத்தம் மீது தனியார் பேருந்து மோதி விபத்து! – 20 பேர் காயம்.

அறந்தாங்கிலிருந்து கும்பகோணம் நோக்கி வந்த தனியார் பேருந்து ஒன்று, திருவாருர் மாவட்டம், மன்னார்குடி அருகே கீழநாகை கிராமத்தின் பேருந்து நிறுத்தம் மீது மோதி விபத்துக்குள்ளானதில், 20 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்த அனைவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுக்குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

-க.மகேஸ்வரன்.

Leave a Reply