சாலையில் சிதறிக்கிடந்த கண்ணாடித் துண்டுகளை கூட்டி அள்ளி அப்புறப்படுத்திய நெடுஞ்சாலை ரோந்து பணி காவல் துறையினர்! – பக்தர்கள் பாராட்டு.

இன்று (17.04.2018) சமயபுரம் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டனர். இதற்காக நேற்று இரவிலிருந்தே பாத யாத்திரையாக பக்தர்கள் சென்றனர்.

இந்நிலையில், திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில், காவிரி பாலம், சஞ்சிவி நகர் அருகே (16.04.2018) அன்று ஏற்பட்ட வாகன விபத்தின் காரணமாக சாலையில் சிதறிக்கிடந்த கண்ணாடித் துண்டுகளை, சாலையில் பாதை யாத்திரையாக காலில் செருப்பு கூட இல்லாமல் நடந்து செல்லும் பக்தர்களின் நலன் கருதி, நெடுஞ்சாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் மூன்று பேர், இரண்டு மணி நேரத்திற்கு மேலாக கூட்டி அள்ளி அப்புறப்படுத்தி சுத்தம் செய்து கொண்டிருந்தனர். இதைப் பார்த்த பொதுமக்களும், பக்தர்களும் ஆச்சர்யமடைந்தனர். அந்த காவல் துறையினரை பாராட்டினர்கள்.

-கே.பி.சுகுமார்.

Leave a Reply