ஏற்காட்டில் லாட்டரி சீட்டு விற்பனை செய்தவர் கைது.

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் லாட்டரி சீட்டு விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டார். ஏற்காடு கொம்மக்காடு கிராமத்தை சேர்ந்த முருகேசன் மகன் சரவணன்(40) முடிவெட்டும் தொழிலாளி. இவர் ஒண்டிக்கடை பகுதியில் லாட்டரி டிக்கெட் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் ஏற்காடு காவல் ஆய்வாளர் ஆனந்தன் சம்பவ இடத்திற்கு சென்று சரவணனை கைது செய்து வழக்கு பதிவு செய்து சிறையிலடைத்தார்.

இவர் இது போல ஏற்கெனவே ஒரு முறை லாட்டரி விற்பனை செய்த குற்றத்திற்காக வழக்குபதிவு செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருந்தார். விடுதலையாகி வந்த பின்னர் மீண்டும் லாட்டரி விற்பனை செய்வதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

-நவின்குமார்.

Leave a Reply