திருச்சியில் மாணவர்கள், இளைஞர்கள் திடீர் போராட்டம்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி, திருச்சி மாவட்ட நீதிமன்றம் அருகில் உள்ள சாலையில், ஜல்லிக்ககட்டு போராட்டம் நடைப்பெற்ற இடத்தில், கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் ஏராளமானோர் தற்போது போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுப்பட்டு வருபவர்களிடம் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பேச்சுவார்த்தையை மாணவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இதையடுத்து, நீதிமன்ற சாலை மூடப்பட்டு காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

-வீ.குணசேகரன்.

Leave a Reply