காவிரி மற்றும் ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: திரைத்துறையினர் மவுன அறவழி போராட்டம்.

காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைக்க வலியுறுத்தியும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் மக்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்பட வேண்டியும், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திரைத்துறையினர் இன்று காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரை மவுன போராட்டம் நடத்தினர்.

நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையில் நடைப்பெற்ற இந்த போராட்டத்தில், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், விஷால், சூர்யா, தனுஷ், கார்த்தி, சிவகார்த்திகேயன், பிரசாந்த், மன்சூர் அலிகான், சிவக்குமார், சத்தியராஜ், செந்தில், பசுபதி, வையாபுரி, உள்ளிட்ட ஏராளமான நடிகர், நடிகைகள் பங்கேற்றனர். இசையமைப்பாளர் இளையராஜா, சங்கர்கணேஷ் மற்றும் இயக்குநர்களும் பங்கேற்றனர். தென்னிந்திய நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், பெப்சி அமைப்பினர் உள்ளிட்டோர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

-எஸ்.திவ்யா, மா.ஜெகதீஸ்வரன்.

 

 

 

Leave a Reply