காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் திருச்சியில் உண்ணாவிரத போராட்டம்!

காவிரி நதிநீர் பிரச்சினையில் உச்ச நீதிமன்றத்தின்  உத்தரவை மதிக்காத மத்திய அரசை கண்டித்தும், தமிழக விவசாயிகள் வஞ்சிக்கப்படுவதை கண்டித்தும், உடனே  காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவை அமைக்க வலியுறுத்தியும், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில், திருச்சி, அண்ணாசிலை அருகில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் இன்று காலை முதல் நடைப்பெற்று வருகிறது.

இதில் தேசிய தென்னக நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் வழக்கறிஞர் அய்யாகண்ணு கலந்துக் கொண்டார்.

-வீ.குணசேகரன், எஸ்.திவ்யா.

Leave a Reply