அடிப்படை வசதிகள் இல்லாத திருத்துறைபூண்டி பேரூந்து நிலையம்! -அவதிக்கு உள்ளாகும் பயணிகள்.

திருவாரூர் மாவட்டம், திருத்துறைபூண்டி நகராட்சி பேரூந்து நிலையத்தில் பயணிகள் அமருவதற்கு இருக்கை வசதிகள் இருந்தும் இல்லாத நிலை உள்ளது. திருத்துறை பூண்டி சுற்றி பல்வேறு கிராமங்களுக்கும் மற்றும் முக்கிய நகரமான திருவாரூர், மன்னார்குடி, முத்துபேட்டை, பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய ஊர்களுக்கு வந்து செல்லும் பயணிகளுக்கு பேருந்து நிலையத்தில் முறையான அத்தியாவசிய அடிப்படை வசதிகளான குடிநீர், சுகாதாரம் மற்றும் இருக்கை வசதிகள் இல்லை என்பது வெகு ஜன மக்களின் கோரிக்கையாக உள்ளது. கோரிக்கையை நிறைவேற்றுமா திருத்துறைபூண்டி நகராட்சி நிர்வாகம்?

-க.மகேஷ்வரன்.

 

Leave a Reply