திருவண்ணாமலை தேவிகாபுரம் தேரோட்டம்…!

திருவண்ணாமலை மாவட்டம், தேவிகாபுரம் அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனுறை பொன்மலைநாதர் கனககிரீஸ்வரர்  திருக்கோவில் தேரோட்டம் 7-ம் நாள் பகல் தேர்த்திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இத்திருவிழாவில் பல ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இவ்விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டார். இக்கோவில் அம்மன் பெரியநாயகி சன்னதி கீழேயும், சிவன் கனககிரீஸ்வரர் சன்னதி மலைக்கு மேலேயும் அமைந்துள்ளது இந்த ஆலயத்தின் சிறப்பு அம்சமாகும்.

-மு.ராமராஜ்.  

-ச.ரஜினிகாந்த்.

Leave a Reply