முன் தேதியிட்டு விற்பனை  செய்யப்படும் பதஞ்சலி பொருட்கள்…!

இந்தியாவில் முன்னணி நிறுவனமாக திகழும் பதஞ்சலி மிகக் குறுகிய காலத்தில் பெரும் வளர்ச்சியை அடைந்துள்ளது. இது பல பன்னாட்டு நிறுவனங்களுக்கு மிகப் பெரிய போட்டியாகவும் விளங்குகிறது. இது உண்மையிலுமே பாராட்டப்பட வேண்டிய  விசியம்தான்.

பதஞ்சலி மற்ற நிறுனவங்களைப் போல் நடிகர், நடிகைகளையோ  அல்லது  பிரபல விளம்பர தூதுவர்களையோ அதன் விளம்பரங்களுக்குப் பயன்படுத்தவில்லை, மாறாக இதன் தலைவர் மற்றும் யோக குருவான பாபா ராம்தேவே விளம்பரங்களில் நடித்து வருகிறார். இது சாமானியர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவிலான வெற்றி அடைந்தது.

மேலும், இந்நிறுவன பொருட்கள் இயற்கை முறையில், இயற்கைப் பொருட்களைக் கொண்டு தயாரிப்பதால், மக்களை ஈர்க்க கூடுதல் வாய்ப்பைப் பெற்றது. இதுவே பதஞ்சலிக்கு மிகப் பெரிய வியாபார   வாய்பாக   அமைந்து விட்டது.

இன்றளவில் பதஞ்சலி நிறுவனத்தின் வளர்ச்சியைப் பார்த்து பன்னாட்டு நிறுவனங்கள் வியந்து நிற்கின்றனர்.

ஆனால், பதஞ்சலி பொருட்களின் தரமும், அவற்றின் நம்பகத் தன்மையும், இன்று வரை கேள்வி குறியாகவே இருக்கிறது. அதை உறுதி செய்யும் வகையில்தான் பதஞ்சலி நிறுவனத்தின் செயல்பாடும் இருக்கிறது.

தற்போது மார்ச் மாதம் இன்னும் முடியவில்லை. ஆனால், அதற்குள் ஏப்ரல்-2018 தயார் செய்யப்பட்டதாக ஒட்டப்பட்ட லேபிலுடன் பதஞ்சலி தயாரிப்பு பொருட்கள் தற்போது  விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

உணவு பாதுகாப்பு மற்றும் மருத்துவ துறை அதிகாரிகளின் அனுமதியோடுதான் இதுபோன்ற குறைபாடுகள் நடக்கிறதா?  இதுசம்மந்தமாக சட்ட ரீதியாக உரிய  விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பார்களா?

-க.மகேஷ்வரன்.

 

 

Leave a Reply