ஆரணி, சம்புவராயநல்லூர் கிராமத்தில் அம்மா திட்டம் முகாம்!

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், சம்புவராயநல்லூர் கிராமத்தில் “அம்மா திட்டம் முகாம்” இன்று (23.03.2018) நடைபெற்றது. இம்முகாமிற்கு ஆரணி வட்டாட்சியர் சுப்பிரமணி, சமூக நல பாதுகாப்பு திட்டம் தனி வட்டாட்சியர் மனோகரன், துணை வட்டாட்சியர் ஓம்.ஆனந்தராஜ், வட்ட வழங்கல் அலுவலர்  திருமலை, வருவாய் ஆய்வாளர் சரவணன், மேற்கு ஆரணி ஒன்றியம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உமாசங்கர், கிராம நிர்வாக அலுவலர்கள் லோகேஷ், கணேஷ், அஸ்வினி, விநாயகம், முனியாண்டி, ஆனந்தி, கோபிநாத், தமிழரசன் மற்றும் கிராம உதவியாளர்கள் மற்றும் சம்புவராயநல்லூர் கிராம ஊராட்சி செயலாளர் பாலமுருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இத்திட்டத்தில் சம்புவராயநல்லூர், நடுகுப்பம், தச்சரம்பட்டு ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக மொத்தம் 172 மனுக்கள் அளித்தனர். இந்நிகழ்ச்சியில் உடனடியாக சான்றிதழ் சரிபார்த்து 15-க்கும் மேற்பட்டவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

                         -மு.ராமராஜ்.

 -ச.ரஜினிகாந்த்.

Leave a Reply