விறகு ஏற்றி வந்த லாரி கவிழ்ந்ததில் லாரியில் இருந்த கூலித் தொழிலாளார்கள் காயம்!

சேலம் மாவட்டம், ஏற்காடு, பட்டிப்பாடி கிராமத்தில் உள்ள மேரிலேண்ட் காப்பித் தோட்டத்தில் விறகுகள் வெட்டி ஏற்றப்பட்ட லாரி அங்கிருந்து வெளியேறும் போது, வழியில் கவிழ்ந்தது. இதில் லாரியில் அமர்ந்திருந்த நல்லூர் கிராமத்தை சேர்ந்த ஆண்டி மகன் ராஜமணி (வயது 27), குப்புசாமி மகன் கல்லுவெள்ளை (வயது 50), கொம்மக்காடு கிராமத்தை சேர்ந்த முத்தசாமி மகன் முருகேசன் (வயது 38) மற்றும் சுப்பிரமணி (வயது 33) ஆகியோர் காயமுற்றுள்ளனர். இவர்கள் ஏற்காடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

-நவீன்குமார்.

Leave a Reply