பெற்றோர்களை பெருமைப்படுத்திய திருச்சி செர்வைட் மேல்நிலை பள்ளி நிர்வாகம்!

திருச்சிராப்பள்ளி, கீழபுதூரில் உள்ள செர்வைட் மேல்நிலை பள்ளியில் “பெற்றோர்கள் தினவிழா” இன்று மாலை 6 மணியளவில் தொடங்கி நடைப்பெற்றது.

செர்வைட் பள்ளியின் முதல்வர் சகோ.லில்லி வரவேற்புரை ஆற்றினார். பள்ளியின் தாளாளர் சகோ.ரோஸ்லினா தலைமை வகித்தார். அருட்தந்தை பன்னீர் செல்வம், மாவட்ட சித்த மருத்துவ அதிகாரி காமராஜ், கிருஷ்ண மூர்த்தி, மனநல ஆலோசகர் ரோசி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர்.

இவ்விழாவில் மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு கலந்துரையாடலும், கலை நிகழ்ச்சிகளும் பார்வையாளர்களை சிந்திக்க வைத்தது.

செர்வைட் சபையின் முன்னாள் தலைமை சகோதரி லடிஸ்கா மேரி உள்பட, ஏராளமானோர் இவ்விழாவில் கலந்துக் கொண்டனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை செர்வைட் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.

-ஆர்.சிராசுதீன்.

-ச.ராஜா.

  

Leave a Reply