உஷா உயிரிழந்த விவகாரம்!- போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி!

வாகனச் சோதனையின் போது நிறுத்தாமல் சென்ற இருசக்கர வாகனத்தைப் போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ் துரத்திச் சென்று திருச்சி, திருவெறும்பூர், கணேசபுரம் பெல் ரவுண்டானா அருகே எட்டி உதைத்ததால், சாலையில் விழுந்த உஷா என்ற பெண் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இந்நிலையில், போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்ட நிவையில், திருச்சி செசன்ஸ் நீதிமன்றத்தில் மீண்டும் காமராஜ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு (CrMP 1411/2018) திருச்சி முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எல்.லோகேஷ்வரன் முன்பு இன்று (22.03.2018) விசாரணைக்கு வந்தது. அப்போது காமராஜின் ஜாமீன் மனுவை நீதிபதி எல்.லோகேஷ்வரன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

 

 

Leave a Reply