கார்த்திக் சிதம்பரம் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து மன்னார்குடியில் காங்கிரஸ் கட்சினர் ஆர்பாட்டம்!

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து இன்று (06.03.2018) மாலை மன்னார்குடி பெரியார் சிலை அருகே நடந்த கண்டன ஆர்பாட்டத்தில், திருவாரூர் மாவட்ட தலைவர் துரைவேலன், மாவட்ட துணை தலைவர் பாலாஜி, மாவட்ட செயலாளர் வீரமணி, மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் மத்திய அரசாங்கத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குடும்பத்திற்கு  பா.ஜ.க அரசு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருவதாக தெரிவித்தனர்.

கார்த்திக் சிதம்பரத்தை உடனடியாக விடுதலை செய்யவில்லையெனில், மாபெரும் போராட்டம் நடத்த போவதாக எச்சரித்தனர்.

-க.மகேஷ்வரன்.

Leave a Reply