வலங்கைமான் அருணாச்சலேஸ்வரர் தேவஸ்தான கோவிலில் மஹா கும்பாபிஷேகம்!

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருள்மிகு உண்ணாமுலையம்மன் சமதே அருணாச்சலேஸ்வரர் தேவஸ்தான கோவிலில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் இன்று (04.03.2018) காலை 9.30 மணிக்கு சிறப்பாக நடைபெற்றது.

இதில் உணவுத்துறை  அமைச்சர் ஆர்.காமராஜ் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

விழாக் குழுவினர்  உபயதாரர்கள் நிகழ்ச்சிகளை சிறப்பாக செய்திருந்தனர். வலங்கைமான் காவல்துறையினர் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்.

-க.மகேஷ்வரன்.

Leave a Reply