ஏற்காட்டில் பற்றி எரியும் காடுகள்…!

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் கோடை வெயிலினால் அவ்வப்போது வனப்பகுதிகளில் காட்டுத் தீ பற்றி எரிகின்றது. இன்று காலை ஏற்காடு பேருந்து நிலையம் எதிரில் உள்ள டேராக்காடு எனும் மலை பகுதியில் திடீரென காட்டு தீ பற்றியது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஏற்காடு தீயணைப்பு துறையினர், தண்ணீர் பீய்ச்சியும், எதிர் தீ மூட்டியும் காட்டுத் தீயை அணைத்தனர். இதனால் அருகில் இருந்த தங்கும் விடுதிகளுக்கும், குடியிருப்புகளுக்கும் தீ பரவாமல் தடுக்கப்பட்டது. இதனால் அப்பகுதி முழுவதும் கருமூட்டமாக இருந்தது.

 -நவீன் குமார்.

 

 

 

Leave a Reply