பல்வேறு சாதனை புரிந்த உருமு தனலெட்சுமி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு, திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ் பரிசு வழங்கினார்!

திருச்சி, காட்டூர், பாப்பாக்குறிச்சி அருகே உள்ள உருமுதனலெட்சுமி கல்லூரியில் 2018 –ஆம் ஆண்டு பல்லைகழகம் மற்றும் மாநில மற்றும் தேசிய அளவில் விளையாட்டு, படிப்பு, என்.சி.சி. உள்ளிட்ட பிரிவுகளில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளை கௌரவிக்கும் வகையில் கல்லூரி தலைவர் பத்மா தலைமையில் இன்று விழா நடைப்பெற்றது.

இவ்விழாவில், திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் அமல்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு கேடயங்களை வழங்கி சிறப்பித்தார்.

விழாவில் பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

ஆர்.சிராசுதீன்.

Leave a Reply