மத்திய அரசை கண்டித்து தெருமுனை விளக்க கூட்டம்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூரில் தெருமுனை விளக்க கூட்டம் 18.02.2018 இன்று காலை 11.00 மணி  முதல் நண்பகல் 12.00 மணி வரை நடைபெற்றது. இக்கூட்டம் உலகமய ஆதிக்கத்திற்கு எதிராக ஒரே மொழி, ஒரே மதம், ஒரே பண்பாடு, ஒற்றை இந்திய ஆட்சிக்கு எதிராக சனவரி 25, 2018 அன்று திருச்சியில் நடைபெற்ற மொழிப்போர்  ஈகியர் நாளில் முன்னெடுக்கப்பட்ட தமிழ் தேசிய சுயநிர்ணய உரிமை மாநாட்டுத் தீர்மானங்களை மக்களுக்கு விளக்கி பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக நடைபெற்றது.  இக்கூட்டதை திருவெறும்பூர் ஒன்றிய அமைப்பாளர் கு.ரகு தலைமை தாங்கி தொடங்கிவைத்தார். நகர அமைப்பாளர் செல்வகுமார் முன்னிலை வகித்தார். இதையடுத்து மக்கள் விடுதலை மாவட்ட செயலாளர் கென்னடி மற்றும் இளந்தமிழகம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில், மக்கள் விடுதலை அமைப்பின் பொதுசெயலாளர் பாலன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். இறுதியாக திருச்சி நகர மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில் நன்றியுரை ஆற்றி தெருமுனை விளக்க கூட்டத்தினை முடித்துவைத்தார்.

-ச.ராஜா.

Leave a Reply