திருமண விழாவில் காஸ் சிலிண்டர் வெடித்ததில் 9 பேர் பலி; 25-க்கும் மேற்பட்டோர் காயம்!-ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த துயரம்.

 

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் உள்ள பீவர் நகரில் ஹோட்டலில் இன்று நடைப்பெற்ற ஒரு திருமண விழாவில், காஸ் சிலிண்டர் வெடித்ததில், குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 9 பேர் பரிதாபமாக பலியானார்கள். 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இச்சம்பவத்தில் அருகிலுள்ள 15-க்கும் மேற்பட்ட கட்டிடங்களும், கட்டிடத்திற்கு வெளியே நிறுத்தப்பட்ட கார்களும் பலத்த சேதமடைந்தன.

சிலிண்டர் வெடிப்புக்கான உண்மையான காரணம் இதுவரை தெரியவில்லை. இதுக்குறித்து போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

-எஸ்.சதிஸ் சர்மா.

Leave a Reply