காலமுறை ஊதியம் வேண்டி கிராம உதவியாளர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்!

வருவாய் துறையில் பணியாற்றும் கிராம உதவியாளர்களுக்கு, அலுவலக உதவியாளர்களுக்கு இணையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், பழைய பென்ஷன் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய்துறை கிராம உதவியாளர் சங்க வட்ட தலைவர் செந்தில்குமார் தலைமையில், கிராம உதவியாளர்கள் ஏற்காடு வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று (15.02.2018) மாலை முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

மேலும், இவர்கள் அங்கேயே தங்களுக்கு தேவையான உணவு சமைத்து சாப்பிடுகின்றனர். இந்த போராட்டத்தில் சங்கத்தின் செயலாளர் ராமு, பொருளாளர் முரளி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சார்லஸ் உள்ளிட்ட 59 கிராம உதவியாளர்கள் கலந்துக்கொண்டுள்ளனர்.

 நவீன் குமார்.

 

 

 

Leave a Reply