குப்பனூர் வனப்பகுதியில் பச்சை மூங்கில்கள் வெட்டி கடத்தல்!-தனிப்பட்ட ஆதாயத்திற்காக கண்டுக் கொள்ளாமல்  இருக்கும் வனத்துறையினர்.

சேலம் மாவட்டம், அய்யோத்தியாப்பட்டினம், குப்பனூர் வழியாக ஏற்காடு செல்லும் மலைப்பாதையை ஒட்டிய பகுதிகளில் உள்ள காய்ந்த மூங்கில்களை வனத்துறையினர் வெட்டி, எடுத்துக்கொள்ள ஏலம் விட்டுள்ளனர்.

இதை குத்தகை எடுத்த நபர்கள், அங்குள்ள காய்ந்த மூங்கில்களை மட்டுமே வெட்டி எடுக்க வேண்டும். ஆனால், அங்குள்ள பச்சை மூங்கில்களையும் சேர்த்து வெட்டி எடுத்து செல்கின்றனர். இதை அங்குள்ள வனத்துறையினரும்சோதனை சாவடியில் பணிபுரியும் வனத்துறையினரும் தனிப்பட்ட ஆதாயத்திற்காக இதைக்கண்டுக்கொள்வதில்லை.

60 ஆண்டுகளுக்கு ஒரு முறை மூங்கில்களில், மூங்கில் அரிசி விளைந்து பின்னர் மூங்கில் குத்தோடு காய்ந்து அழிந்து விடும். கடந்த 2014 ஆம் ஆண்டுதான் அவ்வாறு ஏற்காடு மலைப்பகுதிகளில் உள்ள மூங்கில்கள் காய்ந்து போயின. கடந்த இரு ஆண்டுகளில் சில மூங்கில்கள் மட்டுமே முளைத்து வளர்ந்து வருகின்றன.

இந்த புதிய மூங்கில்களையும், வெட்டி அழிப்பது இயற்கைக்கு செய்யும் துரோகமாகும்.

எனவே, இவ்வாறு பச்சை மூங்கில் வெட்டப்படுவதை வனத்துறை உயர் அதிகாரிகள் உடனே தடுத்து நிறுத்த வேண்டும்.

 நவீன் குமார்.

 

 

 

 

Leave a Reply