பாசனத்திற்கு தண்ணீர் இல்லாத காரணத்தால், கருகும் பயிரை காத்திட விவசாயிகள் ரயில் மறியல்!

பாசனத்திற்கு தண்ணீர் இல்லாத காரணத்தால் கருகும் பயிரை காத்திட, கர்நாடகாவிலிருந்து காவிரி நீரை பெற்றுத்தர மத்திய, மாநில அரசை வலியுறுத்தி, சி.பி.ஐ மாநில செயலாளர் முத்தரசன் தலைமையில், திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரியில் ரயில் மறியல் போராட்டம் இன்று நடைப்பெற்றது.

இதில் திமுக மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன், சி.பி.எம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் முகமது அலி, மதிமுக மாவட்ட செயலாளர் பாலசந்திரன், சி.பி.ஐ தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், இந்திய தேசிய காங்கிரஸ் இளங்கோவன், விவசாயிகள் பாதுகாப்பு இயக்கம் செங்கோலன், விவசாயிகள் கூட்டு இயக்கம் சேரன், தமிழ்நாடு விவசாயிகள் நலச்சங்கம் சேதுராமன், விவசாய தொழிலாளர் அணி, திராவிடர் கழகம் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

-க.மகேஸ்வரன்.

Leave a Reply