திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விபத்து!

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில், காவிரி பாலம் சஞ்ஜீவி நகர் அருகில், இன்று (27.01.2018) இரவு 11 மணியளவில், சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த, அரசு பேருந்து திடீரென பிரேக் அடித்ததால், பேருந்துக்கு பின்னால் வந்துக்கொண்டிருந்த பயணிகள் வேன்  நிலைத்தடுமாறி பேருந்து பின்புறம் மோதியதால் விபத்து ஏற்பட்டது. வேனின் முகப்புக்கண்ணாடி மற்றும் முன்புறம் சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக பயணம் செய்த அனைவரும் உயிர் தப்பினர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நெடுஞ்சாலை ரோந்து பணி காவல்துறையினர், அரசு பேருந்து ஓட்டுனர் நடத்துனரிடமும், வேனின் ஓட்டுனரிடமும் சமரசம் பேசி உரிய இழப்பீட்டை பெற்றுக்கொடுத்ததற்கு பிறகு, பேருந்தும், வேனும் அங்கிருந்து கிளம்பியது. இதனால் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

– ரா. ரிச்சி ரோஸ்வா.

Leave a Reply