குடியரசு தினவிழாவிற்கு தாமதமாக வந்த ஏற்காடு எம்.எல்.ஏ.!- காத்திருந்த மாணவர்கள்.

சேலம் மாவட்டம், ஏற்காடு அரசினர் மேல்நிலைப்பள்ளியில் குடியரசு தினவிழா நேற்று நடைப்பெற்றது. இவ்விழாவிற்கு பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், காவல் ஆய்வாளர் ஆனந்தன் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் நேற்று காலை 8.30 மனி முதலே விழா நடைபெறும் இடத்திற்கு வந்தனர்.

ஆனால், ஏற்காடு சட்டமன்ற உறுப்பினர் சித்ரா வர தாமதமானதால், விழா துவங்காமல் அனைவரும் காத்திருந்தனர். சுமார் 1 மணி தாமதத்திற்கு பின்பு அங்கு வந்த எம்.எல்.ஏ. சித்ரா தேசிய கொடியை ஏற்றினார்.

கட்சி விழாவை போல குடியரசு தினவிழாவிற்கு எம்.எல்.ஏ. தாமதமாக வந்தது, அங்கு சலசப்பை ஏற்படுத்தியது.

நவீன் குமார்.

Leave a Reply