தேசிய வாக்காளர் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி!

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், திருவண்ணாமலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் க.சு. கந்தசாமி தலைமையில், திருவண்ணாமலை நகராட்சி காந்தி சிலை அருகிலிருந்து நான்கு மாட வீதிகள், சின்னக்கடை தெரு, மத்திய பேருந்து நிலையம் வழியாக அறிஞர் அண்ணா நுழைவு வாயில் வரை 5 கி.மீ. தூரம் நடைபெற்ற மினி மாரத்தான் போட்டியினை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் க.லோகநாயகி, வருவாய் அலுவலர் செல்வி. உமாகேஸ்வரி இராமசந்திரன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

மாரத்தான் போட்டியில் மாவட்ட ஆட்சித் தலைவர் க.சு. கந்தசாமி மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் பொ. இரத்தினசாமி அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவர்கள் 500- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

                                 -மு.ராமராஜ்.

Leave a Reply