சப்தம் இல்லாமல் யுத்தத்திற்கு தயாராகி வரும் நடிகர் ரஜினிகாந்த்!

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதியாகிவிட்ட நிலையில், அதற்கான அனைத்துப் பணிகளும் துரிதமாக நடைப்பெற்று வருகிறது.

அதன்படி நடிகர் ரஜினிகாந்த் கட்சியில் வழக்கறிஞர்கள் அணியும் தொடங்கப்பட்டுள்ளது. அதற்கான பகிரங்க உறுப்பினர் சேர்க்கையும் விரைவில் நடைப்பெற இருக்கிறது. அதன்படி அதற்கான அறிவிப்பும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

முதன் முதலில் நமது “உள்ளாட்சித் தகவல்” ஊடகத்தில் நாம் ஏற்கனவே பதிவு செய்துள்ளப்படி, கட்சியின் பெயர், செயல் திட்டங்கள் மற்றும் எதற்காக அரசியலுக்கு வருகிறேன் என்ற கொள்கை விளக்கங்கள்… ஆகிய முக்கிய அறிவிப்புகளை நடிகர் ரஜினிகாந்த் விரைவில் வெளியிட இருக்கிறார். அதில் ஆச்சர்யப்படும்படியான பல அதிரடி அறிவிப்புகளும் நிச்சயம் இருக்கும்.

அதன்படி, நடிகர் ரஜினிகாந்த் அறிவிக்க உள்ள அரசியல் கட்சியில், நேரடியாகவோ (அல்லது) மறைமுகமாகவோ தன் குடும்பத்தாரின் குறிக்கீடோ அல்லது வாரிசு அரசியலோ எள்ளவும் இருக்காது என்பதை பகிரங்கமாக அறிவிக்க இருக்கிறார்.

மேலும், தமிழ்நாட்டு மக்கள் தமது கட்சிக்கு, ஆட்சி அமைக்க வாய்ப்பளித்தால்:

கச்சத்தீவு, காவிரி நதி நீர், முல்லைப்பெரியார் பிரச்சனைகள்… உள்பட தமிழகத்தின் அனைத்து வாழ்வாதார உரிமைகளும் சட்ட ரீதியாக பாதுகாக்கப்படும்.

மேலும், தமிழகத்தில் உள்ள ஆறு, எரி, குளம், குட்டை, கால்வாய்… இப்படி  அனைத்து நீர்நிலைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகள் போர்கால அடிப்படையில் அகற்றி தூர்வாரப்படும்.

பணத்திற்காக தண்ணீரை (குடிநீர்) விற்கும் நிலை என்றைக்கு உருவானதோ; அன்றைக்கே நாட்டில் தர்மம் அழிந்துவிட்டது. தண்ணீரை விற்பதும் பெற்ற தாயை விற்பதும் ஒன்றுதான். எனவே, குக்கிராமங்கள் முதல் பெருநகரங்கள் வரை நாட்டு மக்கள் அனைவருக்கும் பாதுக்காக்கப்பட்ட இலவச குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் வழங்கப்படும்.

பொது இடங்களில் சுற்றித் திரியும் மனநோயாளிகள், மொழி தெரியாத நபர்கள், வேலைக்கு செல்ல முடியாத மற்றும் உழைக்க முடியாத முதியவர்கள், அனாதைகள் மற்றும் நோயாளிகள்…. இதுப்போன்ற நபர்களை, தமிழக அரசே தத்தெடுத்து அவர்களது இறுதிகாலம் வரை பராமரித்து பாதுகாக்கும். தமிழகத்தில் அனாதை என்ற பேச்சுக்கே இடமிருக்காது.

தனியார் மற்றும் அரசு கல்வி நிறுவனங்களில் ஆரம்ப கல்வி முதல், முதுநிலை பட்டம் வரை (பொறியியல் மற்றும் மருத்துவம்) உள்பட அனைத்துத்துறைகளிலும் இலவச கல்வி வழங்கப்படும்.

தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் அதிநவீன இலவச மருத்துவ சிகிச்சை வழங்கப்படும்.

சுற்றுச் சூழலை பாதுகாக்கவும்,  சுவாசிக்கும் உயிர் காற்று மாசுப்படாமல் தடுக்கவும் வேண்டுமானால், தனி நபர்கள் பயன்படுத்தும் வாகனப் போக்குவரத்தைக் முதலில் கட்டுப்படுத்த வேண்டும். அதற்கு ஒரே தீர்வு பொதுப்போக்குவரத்துதான். அதில் முக்கிய பங்கு வகிப்பது அரசு மற்றும் தனியார் பேருந்துகள்….! எனவே, தமிழக மக்கள் அனைவரும் ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் தமிழ்நாட்டிற்குள் இலவசமாக பயணம் செய்ய கட்டணமில்லா (பொது போக்குவரத்து) பேருந்து  வசதி வழங்கப்படும்.

இதன் மூலம் இருச்சக்கர வாகனங்கள் முதல் அனைத்து தனிநபர் வாகனப்போக்குவரத்தும் பெருமளவில் குறைந்துவிடும். இதனால் எரிப்பொருளும் மிச்சமாகும். தொழில் வளம் பெருகும், நாட்டில் வேலைவாய்ப்பும் அதிகரிக்கும். விலைவாசி குறையும். உள்ளுர் பொருளாதாரம் மேம்படும். மக்கள் மனதில் நிரந்தரமான மகிழ்ச்சி நிலைக்கும்.

இன்னும் இதுப்போன்ற ஏராளமானத் திட்டங்களை, தனது கட்சியின் இலட்சியமாக நடிகர் ரஜினிகாந்த் அறிவிக்க இருக்கிறார்.

–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

 

 

Leave a Reply