பேருந்து கட்டண உயர்வை கண்டித்து செய்யாறு அரசு கலை கல்லூரி மற்றும் அரசு பாலிடெக்னிக் மாணவர்கள் போராட்டம்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாரில் உள்ள அரசு கலை கல்லூரி மற்றும் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பயிலும் மாணவ/மாணவிகள் இன்று காலை சரியாக 10:35 மணியளவில் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து  செய்யாறு-ஆற்காடு சாலையில் உள்ள கல்லூரிகளுக்கு முன்பு சாலை மறியல் செய்தனர்.  உயர்த்தப்பட்ட பேருந்து பயணக் கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தியும்,  மேலும், கட்டணத்தை குறைக்குமாறு தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மாணவர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் செய்யாறு – ஆற்காடு சாலையில் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

                       – ச.ரஜினிகாந்த்.

Leave a Reply