பேருந்துக் கட்டண உயர்வை கண்டித்து, அரசு கலை கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டம்!


தமிழக அரசு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அதிரடியாக அரசு மற்றும் தனியார் பேருந்துக் கட்டணத்தை உயர்த்தியது. அதனை கண்டித்து அரசியல் கட்சிகள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருவதோடு, போராட்டங்களையும் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், பொது மக்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளும் தங்கள் பங்கிற்கு ஆர்ப்பாட்டம் மற்றும் சாலைமறியலில் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அதன் ஒருப்பகுதியாக திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி அரசு கலை கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து கல்லூரி வளாகத்திற்குள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

திருவெறும்பூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் (பொறுப்பு) புகழேந்தி தலைமையில், துவாக்குடி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.

-ஆர்.சிராசுதீன்.

Leave a Reply