ஆபத்தான நிலையில் உள்ள தரை பாலம்!-அலட்சியமாக இருக்கும் அதிகாரிகள்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் வட்டம், வடமாவந்தல் கிராமத்தில் ஒரு தரை பாலம் உள்ளது. இந்த தரை பாலமானது சுமார் 25 வருடங்களுக்கு மேலாக பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது.

புதிய தரை பாலம் அமைக்கும் பணி துவங்கப்பட்டு, பின்பு எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாமல் தற்போது பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதற்காக ஒதுக்கபட்ட நிதி என்னாயிற்று? என்பது இதுவரை தெரியவில்லை.

எனவே, சம்மந்தபட்ட துறைச் சார்ந்த உயர் அதிகாரிகள் இதை நேரில் ஆய்வு செய்து, பழுதடைந்துள்ள இந்த பாலத்தை சரிச் செய்வதற்கு போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுப்பார்களா?

ரஜினிகாந்த்.

Leave a Reply