திருவெறும்பூர் கும்பக்குடியில் மகாமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்!-சட்டமன்ற உறுப்பினர் பொ.மகேஷ் கலந்து கொண்டார்.

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள கும்பக்குடியில் மகாமாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றதுநேற்று காலை 6 மணிக்கு கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக பூஜை தொடங்கியது.

இதனை தொடர்ந்து காவிரியில் இருந்து தீர்த்தம் கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜை நடைப்பெற்றது.

முதல் கால யாகவேள்வி, இரண்டாம் கால யாகவேள்வி பூஜைகளை தொடர்ந்து இன்று காலை கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைப்பெற்றது. இதையடுத்து மகாமாரியம்மன், விநாயகர், பாலமுருகன், சப்பாணி கருப்பு உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

இவ்விழாவில் திருவெறும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பொ.மகேஷ் கலந்துகொண்டு பக்தர்களுக்கு பிரசாத பைகளை வழங்கினார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

-ஆர்.சிராசுதீன்.

Leave a Reply