திருவாரூர் எம்.ஜி.அறிவழகனுக்கு முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி!


திருவாரூர் திமுக மாவட்ட பிரதிநிதி எம்.ஜி.அறிவழகன் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி இன்று காலை 11.00 மணியளவில் குடவாசல் பேரூந்து நிலையத்தில் திமுக மாவட்ட செயலாளர் பூண்டி.கே.கலைவாணன் தலைமையில் அனுசரிக்கப்பட்டது.

இதில் நகர செயலாளர் ஆர்.முருகேசன், முன்னாள் நகர செயலாளர் ஏ.கே.சுந்தர், மாவட்ட வர்த்தக துணை அமைப்பாளர் ஆதித்யா பாலு, ஒன்றிய விவசாயி அணி அமைப்பாளர் குணசேகரன், மாவட்ட பிரதிநிதி சேரன், முன்னாள் மாவட்ட பிரதிநிதி செந்தில், வார்டு கவுன்சிலர் முருகேசன் மற்றும் ஒன்றிய பேரூர் திமுகவினர் கலந்துக்கொண்டனர்.

கொடியேற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் அவரது இல்லத்திற்கு சென்று அவரது திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

-க.மகேஸ்வரன்.

Leave a Reply