போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் வலங்கைமான் மக்கள்!

திருவாரூர் மாவட்டம், வலங்கைமானில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த பகுதி குடவாசலில் இருந்து பாபநாசம், கும்பகோணம்-மன்னார்குடி சந்திக்கும் நான்கு முனை பகுதியாக அமைந்துள்ளது.இப்பகுதியில்

சாலைவோரக்கடைகளின் ஆக்கிரமிப்பு காரணமாக சாலை குறுகி காணப்படுகிறது. மேலும், குடவாசலில் இருந்து வலங்கைமான் நுழையும் இடத்தில் டாஸ்மாக் மதுபானக்கடை அமைந்திருப்பதால், அங்கு வரும் மதுப்பிரியர்கள் இருசக்கர வாகனங்களை நடுரோட்டில் நிறுத்திவிடுவதால் போக்குவரத்து ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.

வலங்கைமான் கடைவீதியை ஒரு வழிப்பாதையாக மாற்றி, தெருவோரக்கடைகளின் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றினால் மட்டுமே,வாகன ஓட்டிகளும், அப்பகுதி  மக்களும் நிம்மதி அடைவார்கள்.

-க.குமரன்.

Leave a Reply