பா.ஜ.க. தேசிய செயலாளர் எச். ராஜாவுக்கு எதிராக – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டன ஆர்ப்பாட்டம் !

திருவாரூர் வடக்கு  மாவட்ட  தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் சார்பாக திருவாரூர் தலைமை தபால் நிலையம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. திருவாரூர் மாவட்ட தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் பீர் முஹம்மது தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், பா.ஜ.க.வின் தேசிய செயலாளர் எச்.ராஜாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

சில நாட்களுக்கு முன் கவிஞர் வைரமுத்து எழுதிய  “ தமிழை ஆண்டாள்” எனும் கட்டுரையினை எதிர்த்து  நடைபெற்ற ஆர்ப்பாட்ட கூட்டத்தில் எச்.ராஜா பேசும்போது,  நபிகள் நாயகம் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை பற்றி இழிவாக பேசியுள்ளார் என்றும், இந்து மற்றும் முஸ்லீம்களுக்கு மத்தியில் கலவரத்தினை உண்டாக்க எச்.ராஜா சதி செய்கிறார் என்றும் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயலாளர் ஆர். ரஹ்மத்துல்லாஹ், முஸ்லீம்களை சீண்டி பார்க்கும் எச்.ராஜாவை கைது செய்து சிறையில் அடைக்கவேண்டும் என்றும் கண்டன உரையாற்றினார்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனஸ் நபீல்,முஹம்மது பாசித், அப்துல்மாலிக், சர்க்கரை கனி, முஹம்மது பாசில், முஹம்மது சலீமுதீன் மற்றும் ஏராளமான இஸ்லாம் பெண்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

-ஜி.ரவிச்சந்திரன்.

 

Leave a Reply