ஆபத்தான பள்ளிக்கட்டிடம், திறந்த வெளியில் வகுப்பறை! -அரசு பள்ளியின் அவலநிலை!

IMAGE3 IMAGE5

IMAGE2

IMAGE1திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், நரசமங்களம் என்னும் ஊரில் அரசு ஊராட்சி ஒன்றிய பள்ளி உள்ளது. இங்கு வகுப்பறைகள் திறந்த வெளியில்தான் நடக்கிறது. ஏனென்றால், வகுப்பறைகளானது தரைகள் பெயர்ந்து, மேற்கூரைகள் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. 

செவ்வாய் கிரகத்திற்கு செல்லுமளவிற்கு தகவல் தொழிட்நுட்பம் பெருகியுள்ள இந்த நவீனக் காலக்கட்டத்தில், படிப்பதற்கு குழந்தைகளுக்கு வகுப்பறைகள்கூட இல்லை என்பதை பார்க்கும்போது நெஞ்சம் கனக்கிறது. இது ஒரு தேசிய அவமானம்.

இதை கண்காணிக்காத ஆசிரியர்கள் மற்றும் கல்வி துறை அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதோடு, அதே இடத்தில் புதிய பள்ளிக்கூடம் கட்டுவதற்கு போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டும். 

-ச.ரஜினிகாந்த். 

Leave a Reply