பேருந்து நிலையத்தை ஆக்கிரமித்து பலாப்பழக் கடை : ஏற்காட்டில் பரபரப்பு!

ye0407P2

ye0407P1

ஏற்காடு பேருந்து நிலையத்தை ஆக்கிரமித்து, சுந்தரம்பாள் என்பவர் பேருந்து நிறுத்தும் இடத்திலேயே சுமார் 200- க்கும் மேற்ப்பட்ட பலாப்பழங்களை அடுக்கி வைத்து வியாபாரம் செய்து வந்தார்.

இதனால் போக்குவரத்திற்கும், பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும் பொது மக்களுக்கும் இடையூறாக இருந்து வந்தது.

 இது குறித்து ஏற்காடு பி.டி.ஓ. துளசிராமனுக்கு பல புகார்கள் வந்ததின் பேரில், அவர் இன்று (04.07.2014) ஏற்காடு பேருந்து நிலையம் வந்து இது குறித்து விசாரணை செய்தார்.

 அப்போது பி.டி.ஓ துளசிராமனிடம் சுந்தரம்பாள் மற்றும் அவருக்கு ஆதரவாக அந்தோனி தாஸ் என்பவரும் கடுமையான வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டனர்.

இன்று (04.07.2014)  மாலைக்குள் கடையை காலி செய்ய வேண்டும் என பி.டி.ஓ துளசிராமன் உத்தரவிட்டு சென்றார். இதனால் ஏற்காடு பேருந்து நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.

-நவீன் குமார்.