மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி!

yurkadu

தமிழக அரசின் உத்தரவுப்படி, சேலம் மாவட்டம், ஏற்காடு ஊராட்சி ஒன்றியத்தின் சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி  03.07.2014 அன்று நடைபெற்றது.

பேரணி ஏற்காடு காந்தி பூங்காவிலிருந்து புறப்பட்டு, படகு இல்லம் வரை வந்தடைந்தது. இப்பேரணியில் உள்ளாட்சித்துறைச் சார்ந்த அலுவலர்களும், உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகளும், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

-நவீன்குமார்.