இலங்கை, யாழ்பாணத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் வெட்டிக் கொலை, இருவர் படுங்காயம்!

yal murder.jpgfyal murderyal murder.jpg1இலங்கை, யாழ்பாணம், அச்சுவேலி கதிரிப்பாயில் இன்று (04.05.2014) அதிகாலை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நி.அருள்நாயகி (வயது50) , நி.சுபாங்கன் (வயது20), ய.மதுசா (வயது28) ஆகிய மூவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.

இச்சம்பவத்தில் நி.தர்மிகா (வயது25), ய.வேலன் (வயது30) ஆகிய இருவர் படுங்காயமடைந்து உள்ளனர். நீண்ட நாளாக ஏற்பட்ட குடும்பப் பிரச்சனையே இக்கொலைகளுக்கு காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.

இச்சம்பவத்தில் படுங்காயமடைந்து உள்ள தர்மிகாவுக்கு திருமணமாகி ஒரு குழந்தை இருக்கிறது. இவர் தனது கணவனுடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவரை விட்டுப் பிரிந்து, குழந்தையுடன் தனது தாய் சகோதரர்களுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரது கணவர் இவர்களது வீட்டுக்கு வந்து வீட்டில் உள்ளவர்களுடன் தகராறில் ஈடுப்பட்டதுடன், உங்கள் அனைவரையும் வெட்டிக்கொல்லுவேன் என கூறிச்சென்றதாகவும், அதன் பின்னரே இக்கொலைகள் நடைப்பெற்றுள்ளதால், அவரே இக்கொலைகளை செய்திருக்கலாம் என அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் தெரிவித்தனர்.

தனஞ்செயன்

தனஞ்செயன்

இது தொடர்பாக அச்சுவேலிப் பொலிசார் விசாரணை மேற்கொண்டு படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தர்மிகாவின் கணவர் தனஞ்செயன் என்பவரை கைது செய்துள்ளனர். இந்த கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோ ஒன்றினையும் பொலிசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இக்கொலை சம்மந்தமாக கைது செய்யப்பட்டுள்ள தனஞ்செயன், வெளிநாடு செல்வதற்கான ஏற்பாடுகளை ஏற்கனவே செய்திருந்ததாகவும், இன்னும் ஒரிரு தினங்களில் வெளிநாடு செல்ல இருந்த நிலையிலையிலேயே இக்கொலை சம்பவம் நடைப்பெற்றுள்ளதாகவும் தெரிகிறது.

இக்கொலைகளை செய்து விட்டு வெளிநாட்டிற்கு தப்பி செல்ல திட்டமிட்டு இருந்திருக்கலாம் என அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் தெரிவித்தனர்.