ராகுல் காந்தி இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்

ragulRAGUL RAGUL.png1 RAGUL.png3

அமேதி மக்களவைத் தொகுதியில் 3-வது முறையாக போட்டியிடும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இன்று (12.04.2014) வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்பு மனுவுடன் அவர் தனது சொத்து பற்றிய தகவலையும் அளித்துள்ளார். அதில், தனக்கு ரூ.8.07 கோடி மதிப்பிலான சொத்து இருப்பதாகவும், கார் எதுவும் இல்லை என்றும்  கையில் ரொக்கமாக 35 ஆயிரம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளர்.

அமேதி என் குடும்பம் போன்றது. எனவே, இங்கு சிறப்பான வெற்றியை பெறுவேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அமேதியில் ஏராளமான வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தியிருக்கிறேன். பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்காக பணியாற்றினேன் என்று ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் கூறினார்.

-எஸ்.சதீஸ்சர்மா