மோடியை புகழ்ந்த விஜயகாந்த் : தே.மு.தி.க. வின் குழப்பம் தீர்ந்தது!

vijayakantha in aaraniநாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக பா.ஜனதா கூட்டணியில் சிக்கல் நீடித்து வந்த நிலையில், தமது தேர்தல் பிரச்சார பயணத் திட்டத்தை 10.03.2014 அன்று விஜயகாந்த் வெளியிட்டார். மேலும், தமக்கு ஒதுக்கப்பட்ட 14 தொகுதிகளில் 5 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை நேற்று (14-03-2014)தன்னிச்சையாக விஜயகாந்த் வெளியிட்டார்.

DMDK DMDK.jpg2 DMDK.jpg3pg

விஜயகாந்தின் இந்த நடவடிக்கை பா.ஜனதா தலைவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பா.ஜனதா கூட்டணியிலிருந்து தே.மு.தி.க வெளியேற்றப்படவும் வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது.

ஆனால், முதல் நாள் (14.03.2014) பிரசாரத்தில் பா.ஜனதா குறித்தோ அல்லது நரேந்திர மோடி குறித்தோ எதுவும் பேசாத விஜயகாந்த், அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆற்காட்டில் இன்று (15.03.2014) தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட விஜயகாந்த், ஊழலை ஒழிப்பதற்கான ஒரே சக்தி நரேந்திர மோடிதான் என்று புகழ்ந்து பேசியிருப்பது பா.ஜனதா உடனான கூட்டணி உறுதிப்படுத்தப்பட்டுள்ளதையே காட்டுகிறது. இதன் காரணமாக விரைவில் பா.ஜனதா தொகுதி பங்கீடு குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 -இரா.அருண்கேசவன்