இலங்கையில் விவசாயிகள் கோவணத்துடன் ஆர்ப்பாட்டம்!

srilankasrilanka.jpg1

நிவாரணம் இல்லாத வரவு – செலவுத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று(02.12.2013) மாலை 4 மணியளவில் இலங்கை, கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்று அகில இலங்கை கமநல சம்மேளனத்தினால் முன்னெடுக்கப்பட்டது. வரவு – செலவுத்திட்டத்திற்கு முன் நிதி அமைச்சு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றாமை மற்றும் வரவு – செலவுத்திட்டத்தில் விவசாயிகள் மறக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ‘விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் வயதை 60 -ல் இருந்து 63 ஆக அதிகரித்தமையை உடனடியாக இரத்துச் செய்”, “விவசாயிகளின் நிலுவையான ஓய்வூதியத்தை செலுத்துவதற்கு நிதி ஒதுக்கு” போன்ற கோரிக்கைகளை வென்றெடுப்பதற்காக இந்த ஆர்ப்பாட்டம்  செய்யப்பட்டது.