காவிரி கண்காணிப்பு குழு கூட்டம்: தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட உத்தரவு

Hogennakkalபுதுடெல்லியில் தற்காலிக காவிரி கண்காணிப்பு குழு கூட்டம் நீர்வளத்துறை செயலர் அலோக் ராவத் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் தமிழகம் சார்பில், தலைமை செயலர் ஷீலா கலந்து கொண்டார்.

காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி, காவிரியில் இருந்து தமிழகத்திற்கு 15 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட கார்நாடகத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழகம் சார்பில் கோரிக்கை விடப்பட்டது. மேலும், டிசம்பர் மாதம் 8டி.எம்.சி. தண்ணீரும், ஜனவரி மாதம் 3 டி.எம்.சி. தண்ணீரும் திறக்க தமிழகம் கோரிக்கை விடுத்தது.

இதனை ஏற்று காவிரி கண்காணிப்புகுழு கூட்ட தலைவர் மற்றும் நீர்வளத்துறை செயலரான அலோக் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட கர்நாடகத்திற்கு உத்தரவிட்டார்.