திருடனை விரட்டிப் பிடித்து பணப்பையை மீட்டவர்களுக்கு பாராட்டு!

singapur newsசிங்கப்­பூரில் கத்தி முனையில் திருடப்பட்ட பணப்பை நால்வரின் சமயோசித உதவியால் மீண்டும் பாதிக்கப்பட்டவரிடமே திரும்பியது. திருட்டுச் சம்பவதில் ஈடு­பட்ட 52 வயது ஆடவர் அகப்ப­டக் கார­ண­மாக இருந்த நால்வருக்கும் நேற்று(15.08.2013) பொது உணர்வு விருது வழங்கப்­பட்­டது.

அவர்­களில் இருவர் சிங்கப்­பூர் நிரந்த­ர­ வா­சி­க­ளான வேலுசாமி சேசகு­மார், நிரஞ்சன் நந்த­கோ­பன் ஆகியோர். செயிண்ட் மைக்கல்ஸ் ரோடு அருகே உள்ள சிராங்­கூன் ரோட்டில் நேற்று (15.08.2013) பிற்­ப­கல் 2.15 மணி­அள­வில் வேலைக்குச் செல்ல டாக்­சிக்­காக காத்­தி­ருந்தார் அனுஷா மூர்த்தி, அப்போது அவரைக் கடந்து சென்ற சீன ஆடவர் ஒருவர் அவ­ரி­டம் ஏதோ கேட்­ப­து­போல் ­வந்து தாம் அணிந்­தி­ருந்த மேல்­சட்டை­யி­லி­ருந்து வெள்ளைத் துணி ஒன்றை எடுத்­தார். துணியை அகற்றி அதற்­குள் இருந்த கத்தியைக் காட்டி, அனு­ஷா­வின் கைபே­சியைப் பிடுங்க முயன்றார்.

பதற்­றத்­தில் அனு­ஷா­வின் கையி­லி­ருந்த பணப்பை தவறி கீழே விழ, அதை எடுத்­துக்­கொண்டு அந்த ஆடவர் ஓடினார்.  அந்த நேரத்தில் பேருந்தில் சென்றுகொண்டிருந்த மூவர் ஏதோ அசம்பா­வி­தம் நடப்­ப­தை உணர்ந்து அடுத்த பேருந்து நிறுத்தத்­தில் இறங்­கி­ ஓடியத் ­திருடனைப் பிடித்தனர். பணப்பையைத் திரும்பப் பெற்று  அனுஷாவிடம் ஒப்பத்தனர்.

 

Leave a Reply