சொத்து குவிப்பு வழக்கு : கோர்ட்டில் பொன்முடி ஆஜர்!

Ponmudiசொத்து குவிப்பு வழக்கில் விழுப்புரம் கோர்ட்டில் இன்று (29.07.2013) முன்னாள் அமைச்சர் பொன்முடி ஆஜரானார்.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தி.மு.க. முன்னாள் அமைச்சர் பொன்முடி மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குபதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இன்றும் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது.

இதையொட்டி காலை 11 மணிக்கு முன்னாள் அமைச்சர் பொன்முடி விழுப்புரம் கோர்ட்டில் ஆஜரானார். நீதிபதி வெற்றிசெல்வி விசாரணை நடத்தினார். அந்த வழக்கு விசாரணையை வருகிற ஆகஸ்டு மாதம் 30–ந் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

Leave a Reply