வாலிபரின் தலையுடன் வந்த சபரி எக்ஸ்பிரஸ் !

suside

ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் இருந்து திருவனந்தபுரம் புறப்பட்ட சபரி எக்ஸ்பிரஸ் இன்று (22.07.2013) காலை 8.30 மணிக்கு கோவை ரெயில் நிலையம் வந்தது.

அப்போது ரெயில் என்ஜினின் அடியில் மனித தலை ஒன்று சிக்கியிருப்பதை பார்த்து பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். பின்னர் அந்த தலையை கைப்பற்றி கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் ரெயில் என்ஜின் டிரைவரிடம் விசாரித்தனர். அப்போது அவர் ரெயில் சோமனூர் வந்து கொண்டிருந்தபோது தண்டவாளம் அருகே ஒரு ஆணும், பெண்ணும் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர்.

அவர்கள் அருகே குழந்தை ஒன்றும் நின்று கொண்டிருந்தது. திடீரென அந்த வாலிபர் ரெயில் முன்பு பாய்ந்து விட்டார். சபரி எக்ஸ்பிரஸ் இடையில் எங்கும் நிற்காது. எனவே நான் ரெயிலை நேராக கோவைக்கு ஓட்டிவந்தேன். அந்த வாலிபர் உடல் துண்டானதால் அவர் தலை மட்டும் என்ஜினில் சிக்கியுள்ளது என்றார்.

இதைத்தொடர்ந்து ரெயில்வே போலீசார் அந்த வாலிபர் யார்? என்று விசாரணை நடத்துவதற்காக சோமனூர் விரைந்துள்ளனர்.

 

Leave a Reply